ஒன்று, எந்தக் கருத்தையும் உடனடியாக இறுதி உண்மையாக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது.
இரண்டு, மனிதப் புரிதலுக்கு வரம்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது.
மூன்று, மனித முயற்சி அவசியம்; ஆனால் அனைத்தும் நமது கட்டுப்பாட்டில் இல்லை.
நான்கு, ஆன்மிகம் வாழ்க்கையை நிராகரிப்பதற்கானது அல்ல; வாழ்க்கையுடன் பொருந்தி இருக்க வேண்டும்.
ஐந்து, ஒருவருடைய தனிப்பட்ட உண்மையை அனைவருக்குமான இறுதி உண்மையாக மாற்றக்கூடாது.
ஆறு, எல்லாவற்றையும் சந்தேகித்தாலும் எதற்குமே அர்த்தமில்லை என்று முடிவு செய்து விடாமல் தெரியாத அர்த்தம் இருக்கலாம் என்ற திறந்த மனதை வைத்திருப்பு.
ஏழு, முழு உண்மை தெரியாவிட்டாலும் தற்போது கிடைக்கும் அறிவு, அனுபவம் மற்றும் சிந்தனையைக் கொண்டு சிறந்த முடிவை எடுத்து வாழலாம்; புதிய புரிதல் வந்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ளலாம்
