இறந்தோரை நினைத்து மகிழுங்கள்.
தற்போதைய வாழ்வென்பது, மிகக் கடுமையாக உள்ளது. ஜனநாயகம் என்பது ஊழலை அங்கீகரித்துக்கொள் என்கிறது. விலைவாசி உயர்வை அரசாங்கம் கட்டுக்குள் கொண்டு வர விரும்பவில்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே இருக்கிறது.
புதிய நோய்களும், வாழ்வியல் குறைபட்டு நோய்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. மருத்துவ செலவுகள் விண்ணை முட்டுகிறது.
நாற்பது வயதிற்குமேல் வேலைக்கு உத்திரவாதம் இல்லை.
போதிய வருமானம் இல்லாதவர்கள், இல்லற வாழ்வில் படும் அவமானங்களும் துன்பங்களும் சொல்லி மாள.
பெற்ற பிள்ளைகளை சோசியல் மீடியாவுக்கு தத்து கொடுத்து விட்டு, பெற்றோர் தினம் தினம் வேதனை படுகின்றனர்.
கல்விக்கட்டணம் விண்ணைத்தாண்டி நிலவை சென்றடைந்துந்து விட்டது.
கடன் வாங்காத மனிதர்களை காண்பதரிது.
வாய்ப்பு கிடைக்கும் பொது, மனிதர்கள் அனைவரும் தங்கள், பேராசை ஆணவம் அகங்காரம் இச்சை சுயநலம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர் . எனக்கு முக்கியத்தும் குடு, எனக்கு மரியாதை குடு என்று மனிதர்கள் அனைவரும் கூப்பாடு போடுகின்றனர்.
அனைவரும் ஆதிக்கம் செலுத்த அடிமைகளை எதிர்பார்க்கிறார்கள்.
பணம் சம்பாதிக்க முடியாதரவர்கள் அடுத்தவரை சுரண்டுவதற்கு தயங்குவதில்லை.
விதிவிலக்கின்றி அனைவரும் மாட்டிக்கொள்ளாத வாய்ப்புக்கு காத்திருக்கின்றனர்.
இத்தகைய சூழலை விட்டு ஒருவர் வெளியேறுகிறார் என்றால் அதற்காக அவருக்காக மற்றவர்கள் உயிரோடுஇருப்பவர்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
